கோவையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அறை திறப்பு விழா

நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர் D 6, கரும்பு கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும்பு கடை சாரமேடு பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கண்காணிப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அவர் கூறுகையில். காவல்துறையினருக்கு ஒரு சிறந்த நல்வழிகாட்டியாக இருப்பது சிசிடிவி காட்சிகள். நடந்ததை நான்கு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவதை விட, நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக இந்த சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து இன்று 12 கேமரா பொருத்த பட்டு அதனை கண்காணிப்பு செய்யும் அறையை திறந்து வைப்பது, குற்றங்களை முழுமையாக தடுப்பதாக நான் கருதுகிறேன் என்றார். மேலும், செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்டவைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இது மாதிரியான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு முக்கிய நண்பனாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கரும்புகடை பகுதியின் கவுன்சிலர் அஹ்மத் கபீர், கரும்புகடை பகுதி காவல் ஆய்வாளர் தங்கம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும், தெற்கு உதவி ஆணையர் வீரபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...