பல்லடம் அருகே கேத்தனூரில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்

பல்லடம் அருகே கேத்தனூரில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையம் பிரிவில் எல்.எம் பள்ளி நடத்திய இயற்கையை பாதுகாப்போம் என்ற கருத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



கேத்தனூரில் தொடங்கி குள்ளம்பாளையம் வரை 3 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



பள்ளியின் தாளாளர் பாப்பாள், முதல்வர் சபீனா பர்வீன், பல்லடம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன் பானு மற்றும் காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ரவி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

போட்டிக்குப் பிறகு, காமநாயக்கன்பாளையம் ஆய்வாளர் செல்போன் மோகம் குறைக்குமாறும், அனைத்து வீடுகளிலும் சிசிடிவி பொருத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...