தாராபுரத்தில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் பகுதியில் 7000 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளை வழங்கிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்களின் நலனை காப்பாற்றும் திட்டமாக இதை குறிப்பிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மற்றும் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து, ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டைகளை சுமார் 7000 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவம் மற்றும் கல்வி துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டு, மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் 48 போன்ற பல நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...