நஞ்சியம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற ஆண் மான் பலி

ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு கூட்டம், கூட்டமாக சாலையை கடக்க முயலும் மான்கள் சில சமயங்களில் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நஞ்சியம்பாளையம். ஊதியூர் மலைப்பகுதியில் காடுகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊதியூர் மலையில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு மான்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வந்து கொண்டுள்ளது.



மேலும் தற்போது தாராபுரம் அருகில் நஞ்சியம்பாளையம் என்ற இடத்தில் தண்ணீர் தேவைக்காகவும், உணவு தேவைக்காகவும் காடுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மான்கள் சாலையை கடக்கும் போது, மூன்று மான்களில் ஒரு மான் மட்டும் எதிர்பாராதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூறுகையில் இந்த பலியான மானுக்கு இரண்டு வயது இருக்கும், எனவும் இது ஆன் மான் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...