பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி வெற்றி

கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கூடை பந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நேஷனல் கூடை பந்தாட்ட கழகம் சார்பில், தாக்கூர் கோப்பை 26 ஆவது மாநில அளவிலான கூடை பந்து போட்டி பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 3ம் தேதி புதன் கிழமை தொடங்கியது.

இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கு பெற்று விளையாடின.



நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றது.



விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...