மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மேட்டுப்பாளையத்தில் அக்கட்சி நிர்வாகிகள் காரியம் செய்தனர்

நரசிம்மநாயக்கன்பாளையம் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு தீபம் காட்டி மாலைகள் சூடி மலர்கள் தூவி மரியாதை செய்தனர். அதன்பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: தேமுதிக தலைவரும், சினிமா நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து 11 நாட்களாகிறது.



இதற்காக தேமுதிக கோவை வடக்கு மாவட்டம் சார்பாக அவருக்கு மேட்டுப்பாளையத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் சன்முகவடிவேல் தலைமையில் அவர் உட்பட 11 கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து பவானி ஆற்றில் குளித்துவிட்டு 11ம் நாள் காரியங்கள் செய்தனர்.



அதனையடுத்து நரசிம்மநாயக்கன்பாளையம் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்த்தின் திரு உருவப் படத்திற்கு தீபம் காட்டி மாலைகள் சூடி மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.



அதன்பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் அசோகபுரம் ஊராட்சியில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி, மெளன அஞ்சலி மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.சக்கையா செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு கேப்டனுக்கு மலர் மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஊராட்சி தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம். பி.ஜே.பி ஒன்றிய தலைவர் புவனேஷ்குமார், கார்த்திக், இந்து முன்ணனி தியாகராஜன், அ.மு.மு.க நிர்வாகி முத்துவடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...