உடுமலையில் வழக்கம் போல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உடுமலை போக்குவரத்து பணிமனையில் இயக்கப்பட்டு வரும் 94 கிராமம் மற்றும் புறநகர் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.



மேலும் பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.



இருப்பினும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...