பல்லடம் அரசு பேருந்து பணிமனை முன்பு கொட்டும் மழையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பல்லடம் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க கூட்டுக்குழு, சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு, ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆகியோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணம், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 96 மாத அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழில் சங்கங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பல்லடம் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க கூட்டுக்குழு, சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு, ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆகியோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மண்டல தலைவர் ரவீந்திரன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, வழக்கறிஞர் பொன்னுசாமி, தமிழ்நாடு பழனிச்சாமி, நகர பொருளாளர் தர்மர், கிளைச் செயலாளர் ரவிபிரபு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...