ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு -கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு


கோவை மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்டில் குப்பை மேலாண்மை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியின் 2017-18ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.

கடந்த 1996ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்ட பட்ஜெட்டில் மொத்த வருமானம் 1072 கோடிகள் எனவும் செலவீனம் 1059 கோடி ரூபாய் எனவும் உபரி நிதி 13 புள்ளி 04 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு தொகைகளான தலா கோடி ரூபாய் பெறப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பை மேலாண்மையின் ஒரு பகுதியாக குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தவுடன் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் சென்சார் திட்டம் செயல்படுத்த 15 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கோவை மாநகராட்சியில் உள்ள 8 குளங்களை மேம்படுத்த 15 கோடி ரூபாயும், அம்ருட் திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளை மேம்படுத்த 428

லட்சம் ரூபாயும் , வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 171.86 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...