துடியலூர் அருகே சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

புதுப்பானையில் பொங்கல் வைத்தும், அம்மி அரைத்தும், கயிறு இழுத்தும், உரி அடித்தும், சிலம்பம் சுற்றியும், பறை இசைத்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.



கல்லூரி வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு, முளைப்பாரி வைத்து, புதுப்பானையில் பச்சரிசியிட்டு அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



மேலும் பசு மாட்டிற்கு கற்பூரம் காட்டி பழம் வழங்கினர்.



தொடர்ந்து பாரம்பரிய உடையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதில் மாணவிகள் அம்மி அரைத்தும், ஆசிரியைகள் மாணவிகள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டிகள், உரியடித்தல், சிலம்பம், மெதுவாக சைக்கிள் ஒட்டுதல், பறை இசைத்தல் எனபல்வேறு போட்டிகள் நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...