தமிழக அரசுக்கு எதிராக தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அண்ணா சிலை அருகே திமுக அரசை கண்டித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை காப்பாற்ற தவறியதாக கூறும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளை சரியாக எடுத்து இருக்காத அரசை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மக்களை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வராமல் அர்ஜுன் சம்பத் அவர் வந்த காரில் நிற்காமல் சென்று விட்டார்.



அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...