கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் பொங்கல் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.


கோவை: கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் 12.01.2024, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.



காளை மாடுகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்களின் வரிசையுடன் நடைபெற்ற விழாவினை துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.



விழாவையொட்டி மாணவர்களின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டாகிய சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



அத்துடன் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடல் போட்டிகளும், உரியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடைபெற்றன.



நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...