இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்த சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரை கோட்டைமேடு பகுதியில் இருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அபுதாஹிரை கண்டுபிடித்து தருமாறு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து நீதிபதி வேலுச்சாமி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அபுதாஹிர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் அபுதாஹிரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். 

தொடர்ந்து அபுதாஹிரை வருகிற ஏப்ரல் 5ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...