கோவை கங்கா இன்ஸ்டிடியூட்டில் செவிலியர் பயிற்சி துவக்க விழா

கோவை துடியலூரில் உள்ள கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூரில் உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் செவிலியர் பயிற்சியின் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகி, குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.



விழாவில் கங்கா மருத்துவமனையின் தலைவர் கனகவள்ளி சண்முகநாதன், கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஏ. கலியமூர்த்தி, திருச்சூர் அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் உஷா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செவிலியர்களின் பங்கு குறித்து டாக்டர். ஏ. கலியமூர்த்தி உரையாற்றினார்.



மாணவ, மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்தனர். சி.என்.ஓ இக்னேசியஸ் மேரி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசித்தார், 120 செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



அலைடு ஹெல்த் சயின்ஸ் ஆசிரியர் அகிலாதேவி மாணவ, மாணவிகளுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜெபாகுமாரி நன்றி கூறிய பிறகு, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் ஏர் ஆம்புலன்ஸ், செல்பி பயிண்ட்ஸ் அமைக்கப்பட்டு இருந்தன, மேலும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...