40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது, வனத்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பாலமலை அருகே உள்ள கோவனூர் என்ற கிராமத்தின் அருகில் செவ்வாய்கிழமை இரவு காட்டு யானை கூட்டம் ஓன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த பயன்படுத்தப்படாத தோட்டத்து கிணற்றில்  10 வயது மதிக்கதக்க ஆண் யானை தவறி விழுந்தது.

 

இந்நிலையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்ட அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புதன்கிழமை யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 40 அடி கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, எனினும் இரவு நேரம் ஆனதாலும், மற்ற காட்டு யானை கூட்டம் வந்ததாலும் யானையை மீட்கும் பணியை ஒத்தி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் யானையை மீட்கும் பணி துவங்கியது.



வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து யானையை கிணற்றில் இருந்து மீட்கும் பணியை துவங்கினர், மேலும் வனத்துறை மருத்துவர்கள் அசோகன், வியஜராகவன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் முதலில் யானைக்கு  மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் கிணற்றின் உள்ளே சென்ற வனத்துறையினர் கிரேன் உதவியுடன் யானையை கட்டி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் யானையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டது.யானையின் கால்களில் அடியேதும் படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள் யானையை அனுப்ப முடிவு செய்த வனத்துறையினர் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்த உடன் யானை வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் மீட்பு பணி சிறப்பாக நடைபெற்றதாகவும், யானையின் கால்களில் அடி படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே அனுப்பியதாக கூறிய அவர் தனி குழு அமைக்கப்பட்டு அந்த யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கப்படும் என தெரிவித்தார். 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை 30 மணி நேரத்தில் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிய வனத்துறையினருக்கு பொதுமக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...