கோவையில் சின்ன வெங்காயம் விலை சரிவு – ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால்,, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வாரசந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், ஏழு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கோவை: கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடகா மாநிலம், மைசூர் பகுதியில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும், கோவைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து இருக்கும்.

இது தவிர, கோவை மாவட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி உட்பட பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் வெங்காயத்தின் அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 100 ரூபாய் வரை விற்பனையானது.

பின், சின்ன வெங்காயத்துக்கு மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைத்ததால், விவசாயிகள் பலரும் சின்ன வெங்காயத்தை பயிரிட துவங்கினர். தற்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து டன் கணக்கில், சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வாரசந்தைகளிலும், காய்கறி சில்லறை விற்பனை நிலையங்களிலும், சின்ன வெங்காயத்தின் விலை, 100 ரூபாய்க்கு ஏழு கிலோ என நேற்று (பிப்.5) வரை விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'கர்நாடக மாநிலம், மைசூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ ஐந்து ரூபாய் என விற்பனையாகிறது. அங்கிருந்து லாரியில் கொண்டு வரும் கட்டணம், ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுடன் மார்க்கெட்டுகளில் தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் உள்ள மொத்த மார்க்கெட்டுகளுக்கு நாள் ஒன்றுக்கு, 100 டன் வரத்து இருந்த சின்ன வெங்காயம், தற்போது, 200 டன் என உயர்ந்துள்ளது. மைசூர் வட்டாரத்தில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரவு இன்னும் அதிகரிக்கும் என்ற நிலை உள்ளதால், மேலும் விலை சரியலாம். பெரிய வெங்காயத்தின் விலை தரத்தை பொறுத்து கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...