உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார் டிஎஸ்பி சுகுமாறன்

10 வயதிற்கு உட்பட்டோருக்கு சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 4-வது ஆண்டு திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி நடைபெற்றது. உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி, அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆசான் வீரமணி வரவேற்றார். போட்டியை உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தொடக்கி வைத்தார்.



போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவு, சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர்,கோவை மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் மற்றும் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...