கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் கொண்ட புதிய டயாலிசிஸ் மையம் ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள் இலவசமாக பயனடைந்து வருகின்றனர் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் சீத்தாலட்சுமி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறுநீரக நோயாளிகளுக்கான புதிய டயாலிசிஸ் மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த மையத்தில் 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட பொதுமக்கள் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினரால் டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரு வேலைகளில் 20 நோயாளிகள் இந்த மையத்தின் மூலமாக பயனடைந்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழலில் இயங்கி வரும் இந்த மையத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையம் செயல்படுகிறது.

பொதுமக்கள் 9498599703, 9159557631 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...