கோவை உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் நாய் தொல்லை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூா், ராமநாதபுரம், புலியகுளம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றி வருகின்றன.

மாநகரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றும் தெருநாய்களால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இரவுப் பணி முடித்து இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கூட்டம் துரத்துவதால், விபத்துகள் ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகரில் நாய்கள் தொல்லை மேலும் அதிகரித்து வருகிறது.

எனவே ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் நாய்கள் கருத்தடை மையங்களுடன், கூடுதலாக கருத்தடை மையங்களை ஏற்படுத்தி மாநகரில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் இன்று (பிப்.19) கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...