கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகள் எனும் திட்டம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


கோவை: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இதில் கோவைக்கென சில அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அவை, கோவை, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பணிபுரியும் மகளிருக்கான ' தோழி விடுதிகள்' எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கோவை, மதுரை மற்றும் சென்னையில், 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கான ஆறு மாத உறைவிட பயிற்சி வழங்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முதன்மை நதியான நொய்யலை புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் சென்னை, மதுரை போலவே மாபெரும் நூலகம், கலைஞர் பெயரில் அமைக்கப்படும். கோவையில் 1000 இடங்களில் இலவச wifi-hotspot வசதிகள் கொண்டுவரப்படும். கோவை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் பணிகள் துவங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...