கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: கிராமப்புறத்தில் நடக்கும் தீண்டாமைக்கு உரிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஹேர் டிரசஸ் யூனியன் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் கல்வி, அரசு வேலை வாய்ப்புகளை தங்கள் சமூகத்திற்கும் ஒதுக்க வேண்டும், முடி திருத்தம் நலவாரியத்தில் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமிக்க வேண்டும், மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சியில் இயங்கி வரும் சலூன் கடைகளில் தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.



கிராமப்புறங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாகி வரும் மருத்துவ சமுதாய மக்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்து சமய அறநிலை துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள், தவில் மற்றும் இசைக் கலைஞர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...