தடாகம் சாலையில் புதிய சோதனைச் சாவடியை திறந்து வைத்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்

குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்பட வேண்டும் எனவும், மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் எனவும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தடாகம் சாலையில் உள்ள காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் தனியார் பங்களிப்புடன் சுமார் 6 லட்சம் செலவில் புதிய சோதனைச் சாவடி கட்டப்பட்டது.

இதில் நம்பர் பிளேட் எண்களை துல்லியமாக பதிவு செய்யும் சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணன் குற்றம் செய்பவர்கள் மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கண்டு பயப்படு வேண்டும். மற்றவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் இருக்கலாம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...