பெரியநாயக்கன்பாளையத்தில் மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகள்-500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட அ.இ.அ.தி.மு.க மற்றும் நண்பர்கள் சதுரங்க குழு இணைந்து மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் ஓப்பன் செஸ் போட்டிகளை நடத்தியது.



கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 5 வயது முதல் 70 வயது வரையிலான 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஜூனியர் மற்றும் மற்றும் ஓப்பன் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செஸ் போட்டிகளில் தேசிய அளவில் சாதனைகள் புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகரச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயலாளர் ரகுநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சசிக்குமார், வீரபாண்டி பேரூராட்சி செயலாளர் ராமராஜ், ஒன்றியக் கவுன்சிலர் மாணிக்கம், கோவை மாவட்ட சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆறுமுகம் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...