சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகிர் தலைமை நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் கடந்த 22ம் தேதி உக்கடம் பகுதியில் சாலையோர துணிக்கடை வைத்திருந்த அபுதாகீர் என்பவரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அபுதாகீரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி்சி.ஐ.டி சார்பில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 24-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கைது செய்யப்பட்ட அபுதாகீர் அஜர்படுத்தப்பட்டார். 

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதியிடம், அபுதாகீரை போலீஸ் காவலில் அனுப்பக் கூடாது என அபுதாகீர் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். மேலும் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார். 

இதயனிடயே சசிகுமார் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட அபுதாகிர் தலைமை நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தபட்டார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...