கிணத்துக்கடவில் கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம் - காவல்துறை விசாரணை

அரசம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார். அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


கோவை: உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்று இரவு கோவையில் நோயாளியை இறக்கிவிட்டு மீண்டும் உடுமலைப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அப்போது பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபரை காப்பாற்ற ஓட்டுநர் வினோத்குமார் ஆம்புலன்ஸை பின்னோக்கி இயக்கி உள்ளார்.



அப்போது கோவையில் இருந்து பின்னால் வந்த கார், ஆம்புலன்ஸ் மீது மோதியது.



இதில் ஆம்புலன்ஸ் மற்றும் காரும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து மளமளவென எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்ஸில் பற்றிய எரிந்த தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த ஓட்டுநர்கள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...