பாரூக்கின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்ப்பு

கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பப்பட்டது. பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனால் அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் என்ற கருத்துகளும் பரப்பப்பட்டது. 


இந்த நிலையில், பாரூக் குடும்பத்தில் அவரது பெற்றோர், மனைவி ரஷீதா (31) மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது அவரது குடும்ப வருமானத்திற்கு திராவிட கழகம் சார்பில் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாரூக்கின் குடும்பத்தை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினர். பாரூக்கின் குழந்தையான அப்ரீத் (13) எட்டாம் வகுப்பும், ஹனபா (8) 1ம் வகுப்பும் இஸ்லாமிக் அரபிக் கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் படிப்பிற்கு தேவையான செலவுகளை ஜாமத்தே இஸ்லாமி ஹிந்த் ஏற்பதாகவும் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...