பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உடுமலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி அடையச் செய்த ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் ஆலோசணை கூட்டத்தில் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான முப்பெரும் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.

நிகழ்வுகளில் கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம், வாழ்த்துரங்கம் நடைபெற்றது. மேலும் ஆலோசணை கூட்டத்தில் 12 ஆண்டுகளாக பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் (சிறப்பாசியர்கள்) பலர் தங்களது மாணவச் செல்வங்களை பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற்ற, வெற்றி அடையச் செய்த நிலையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் 12 ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வரும் ஓரே கோரிக்கை பகுதி நேர ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் கௌதமன், மாநில செயலாளர் யசோதா, மாநில பொருளாளர் வைகை பிரபா, மாநில அமைப்பு செயலாளர் குமரேசன், மாவட்ட திருப்பூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட தமிழக முழுவதும் இருந்து மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...