நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.03.2017) மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்தல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தமாகவும், பேணிபாதுகாப்பது மிக அவசியமாகும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளோடு பொதுமக்களும் கைகோர்த்து நீர்நிலைகளை பேணிகாப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலைகளில் கட்டிடக்கழிவுகள் கொட்டுவது, பிளாஸ்டிக்கழிவுகள் மற்றும் திட, திரவுக்கழிவுகள் கொட்டுவதென்பது தடுக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பொதுமக்கள் தங்களது பட்டா நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறுபவர்களின் மீது அவற்றிற்குண்டான அபாராதம் விதிக்கப்படும். தமிழக அரசு, தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவை மாவட்டத்திலுள்ள குளங்கள் தூய்மை படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. எனவே, பொதுமக்களும் குளங்களை பாதுகாக்கும் மற்றும் தூய்மைபடுத்தும் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...