கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வாலிபர்களை மீது வழக்குப்பதிவு செய்த சாய்பாபா   காலனி போலீசார்  அவர்களை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, மருதமலையில் இருந்து ஆவாரம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ரவிக்குமார் ஓட்டி வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் சாலையில் அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்த போது, சிலர் பேருந்தை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய டிரைவர் ரவிக்குமார், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் அவரை ஆபாசமாக திட்டியதுடன், கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து ரவிக்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் நல்லம்மா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (23) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் தக்கல் மார்க்கெட் அருகே தங்கி இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...