புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடை மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது

கோவையை அடுத்த அன்னூர் ஒன்றியத்துக்குட்பட்ட  செங்காளிபாளையம் பகுதியில் நேற்று திடீரென டாஸ்மாக் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர்  சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கடையை அப்பகுதியிலிருந்து அகற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட  டாஸ்மாக் மேலாளர் பிரபாகரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன், அப்பகுதியிலிருந்து கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் கடையை தற்காலிகமாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...