விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இளைஞர்கள் போராட்டம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!



டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில்  போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். 



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் திடீரென திரண்ட இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் இளைஞர்கள் பேசுகையில், 'டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் தற்போது போராட்டம் நடத்தி வருகிறோம். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் வெளியே வரவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை செயல்படுத்த கூடாது. 



ஜல்லிக்கட்டு போராட்டத்தை வென்றெடுத்தது போல், இந்த போராட்டத்திலும் இளைஞர்கள் வெற்றி பெறுவோம்' என்றனர்.

 முன்னதாக இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை வஉசி மைதானத்தில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறையினர் வஉசி மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதாக தெரிவித்து போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால், அவ்வாறு வஉசி மைதானத்தில் எவ்வித தடைஉத்தரவும் அமல்படுத்தவில்லை. அதனால், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாங்கள் திரண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம்" என்றனர்.



தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் . 



தற்போது ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...