தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் தாராபுரத்தில் அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே உள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடிக்கம்பம், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. அரசு பொதுச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள்,கொடிகள் போன்றவை வரையப்பட்டிருந்தால் அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள். அரசியல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை, காந்திசிலை, உடுமலை ரோட்டில் உள்ள பெரியார் சிலை, 5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே கட்சியினர் சுவர் விளம்பரங்கள், மேலும் வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...