வால்பாறையில் சாலையில் நடந்து சென்ற 7 காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில சமயம் யானை மனித மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதை வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகம் அதிகாரிகள் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்ட வழியாக ஏழு காட்டு யானைகள் நடந்து வந்து பொள்ளாச்சி சாலையில் நடந்து சென்றது.



எதிரே வந்த வாகனம் ஓட்டுநர்கள் பயந்து திருப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்த வால்பாறை வனச்சாராக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன காவலர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். திடீரென்று காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...