தொண்டாமுத்தூரில் சீராக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கபடவில்லை என குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோர் 15 பேருந்துகளையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, வறட்சியான சூழ்நிலை மற்றும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் தண்ணீர் விநியோகிக்க போதுமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திறகு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...