கோவை துடியலூர் அருகே கள் இறக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..!

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு கூறினார்.


கோவை: கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியில் தோட்டத்தில் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கார்த்திக் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளகிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். இவரது மகன் கார்த்திக். இவர்கள் தங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் கள் இறக்கிக்கொண்டு இருக்கும் போது துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.

அதன்பிறகு கார்த்திக்கை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் விவசாயிகள் அனைவரும் துடியலூர் காவல்நிலையத்திற்கு வந்தனர்.



இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், வழக்குப் பதிவு செய்யப்பட்ட கார்த்திக் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கள் மற்றும் நீரா பானம் இறக்க அனுமதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை. தொடர்ந்து நாங்கள் அனுமதி கேட்டு வருகின்றோம். ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது, ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை இல்லை. கள் இறக்குதல் என்பது விவசாயிகளின் உரிமை போராட்டம் ஆகும். காவல்துறை தலையிட்டால் கடுமையான போராட்டம் செய்வோம் என்று கூறினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...