கோவையில் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், கோவை மாவட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.


கோவை: வரும் 19ஆம் தேதிதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்நடைபெற உள்ள நிலையில், 100% வாக்குப் பதிவினை உறுதி செய்யும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை உறுதி செய்யும் விதமாக நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் இன்று (மார்ச்.25) துவக்கி வைத்தார்.



செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், தேர்தலில் நேர்மையாக வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 

இந்த விழிப்புணர்வு வாகனமானது நகரப் பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளின் முக்கிய இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...