தாராபுரத்தில் கொடுத்தல் வாங்கல் தகராறு; இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் கைது..!

இந்து மக்கள் கட்சியின் பெண் மாநில நிர்வாகியை தாக்கிய வழக்கில், அதே கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு.


திருப்பூர்: தாராபுரத்தில் கொடுத்தல் வாங்கல் தகராறில் இந்து மக்கள் கட்சியின் பெண் மாநில நிர்வாகியை தாக்கிய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணி( 34) இந்து மக்கள் கட்சியில் மாநில பெண் நிர்வாகியாக உள்ளார். இவர் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தாராபுரம் அடுத்த காந்திஜி நகரைச் சேர்ந்த சங்கர் (51) இவர் இதே கட்சியில் அமைப்புக் குழு தலைவராகவும், இவரது நண்பர் சுரபிமணி (53) இவரும் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் சங்கர், மதிவாணியிடம் வட்டிக்கு கடனாகப் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் கேட்டு சங்கரிடம் போனில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சங்கர் தனது மனைவியிடம் கூறியபோது கோபமடைந்த சங்கர், மனைவி இருவரும் சேர்ந்து மதிவாணி பியூட்டி பார்லருக்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் சுரபிமணியும் அவர்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சண்டையில் மதிவாணி காயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போலீசார் வாக்கு மூலம் பெற்று மதிவாணியை தாக்கியதாக சங்கர் மற்றும் சுரபிமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...