100 சதவீதம் வாக்குப்பதிவு: திருப்பூரில் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்

100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன பேரணியை, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்வு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர் கிருத்திகா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 



வாக்களிப்பது நம் உரிமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...