உரிய இழப்பீடு கேட்டு நல்லதங்காள் பாசன விவசாயிகள் தாராபுரம் அருகே கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு நல்லதங்காள் அணை கட்டுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 750-க்கும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போது வரை வழங்கப்படாததால் விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். நல்லதங்காள் நீர்த்தேக்கணைக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் கடந்த 6-மாதங்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...