கல்லாறு பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் - பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

25 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்க எந்த குறைகளையும் அவர் தீர்க்கவில்லை என பாஜக வேட்பாளர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சியை சேர்ந்த கல்லாறு பகுதியில் இன்று (ஏப்ரல்.2) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது மக்களிடையே பேசிய அவர், இந்த கல்லாறு கிராமத்தில் இருக்கின்ற ஆதிவாசி காலனி மற்றும் சமத்துவபுரம் ஆகிய சிற்றூர்களுக்கு இடையில், மேட்டுப்பாளையம் முதல் உதகை செல்லும் மலை இரயில் பாதை அமைந்துள்ளது. 150-க்கும் மேல் வீடுகள் அமைந்துள்ள, இந்த இரண்டு சிற்றூர்களையும் இணைக்கும் விதமாக சுரங்க நடைபாதை ஒன்று அமைத்துக் கொடுக்கச் சொல்லி, கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்திருக்கிறார்கள்.



ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும், புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக, 2011-12 நிதியாண்டு முதல் தனித்தனியே ஆண்டிற்கு 5 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த நிதியை வைத்து, நம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு தேவைப்படுகிற பணிகளை மேற்கொள்வது தான் அடிப்படை தார்மீகம். அவ்வகையில், இந்த ஊர்மக்கள் சொல்வதுபடி பார்த்தால் 25 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் 2ஜி ராசாவே பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இப்படி, நீலகிரி பாராளுமன்றத் தொகுதி முழுக்கவும், எங்குமே குறைகளும் தீர்க்கப்படவில்லை, வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும்படி கோரிக்கை வைத்த மக்களிடம், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...