துடியலூர் அருகே அண்ணாமலை பிரச்சாரம் – கிரேன் மூலம் மாலை அணிவித்து இந்து முன்ணணி அமைப்பினர் வரவேற்பு

கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராக்கிபாளையம் பிரிவு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு பிரச்சாரம் செய்ய வந்த அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 12 அடி உயரம் உள்ள மிகப்பெரிய பிரமாண்டமான மாலையை கிரேன் மூலம் அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.



அங்கு அண்ணாமலை பேசும்போது இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்தில் கிடைத்த எம்பிகளால் எந்த பயனும் ஏற்படவில்லை அனைத்து வசதிகள் இருந்தும் கோவை கடந்த 10 ஆண்டுகளில் எம்பிகளால் எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.



தமிழகத்தில் ஒரு முக்கிய நகரமாக இந்திய வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் உலக வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் கோவையை மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியில் இருக்கும் போது இங்கு உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலை இங்கு இருக்க வேண்டும்.

ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை வாக்கு இயந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பார்த்து அரசியலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்கள் கூட தற்போது பாஜக பக்கம் வந்துள்ளனர்.



அடுத்த 15 நாட்கள் தான் கடுமையான வேலை. நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாஜகவிற்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் உங்களுக்காக நாங்கள் பாடுபடுவது எங்கள் பொறுப்பு என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...