உக்கடத்தில் உள்ள அதிஷ்ட விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை பரப்புரை தொடக்கம்

தங்க நகை தொழில் வாழ்வாதாரமாக இருக்கின்ற கோவையை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க மத்திய அரசிடம் பேசி அதற்கான முயற்சிகளை எடுப்போம் என பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதி அளித்தார்.



கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில் உள்ள அதிஷ்ட விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அதே பகுதியில் வைத்து தனது இன்றைய பிரச்சாரத்தை துவங்கினார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், சரித்திரத்தில் பதிவு செய்யக் கூடிய வெற்றி இந்த கோவை தெற்கு தொகுதியில் கடந்த தேர்தலில் கிடைத்ததாகவும், அதே போன்ற வெற்றியை கோவை மக்களவை தொகுதியில் கேட்கின்றோம் எனவும் குறிப்பிட்டார். இந்த பகுதி நகை சம்மந்தப்பட்ட தொழில் மிகுந்த பகுதி எனவும், நகையை பொறுத்த வரை இந்த பகுதியை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்வோம் என்றும் கூறியதுடன், மற்றவர்களை போல இதை செய்வோம் அதை செய்வோம் என சொல்லாமல், செய்த பணிகளை சொல்லி இன்னும் அதிகமாக பணிகளை செய்ய தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



கோவை தெற்கு தொகுதியில் 80 லட்ச ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு உள்ளது எனவும் கூறிய அண்ணாமலை, ஓரே ஒரு வாக்குறுதி மட்டும் கொடுக்கின்றோம், தங்க நகை தொழில் வாழ்வாதாரமாக இருக்கின்ற கோவையை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க மத்திய அரசிடம் பேசி அதற்கான முயற்சிகளை எடுப்போம் எனவும் உறுதி அளித்தார்.



அதற்கு பின்பு பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, நம்முடைய தொகுதி இந்தியாவிலேயே கவர்ச்சிக்கு மயங்காத தொகுதி. பாரதிய ஜனதா கட்சிக்கு எங்களுடைய வாக்கு என்பதும், கோவையின் உடைய வளர்ச்சிக்கான வாக்கு என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கக் கூடிய தொகுதி நம்முடையது. தாமரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு, நாம் அத்தனை பேரும் கடுமையாக உழைக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் என்பவர் கோவையின் உடைய வருங்கால வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொடுத்து உள்ளார். மூன்றாவது முறையாக பதவியேற்கின்ற பொழுது நம்முடைய ஊரின் உடைய பிரதிநிதியாக நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர் பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வந்து சேர்க்கக்க வேண்டும்.



மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் கோயமுத்தூர் என்றால் அது அண்ணாமலைக்கு என்றும், அவர்களுடைய வாக்கு அண்ணாமலைக்கு என தீர்மானமாக இருக்கிறார்கள். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை நடக்க இருப்பது மாநிலத்திற்கான தேர்தல் அல்ல, நடக்க இருப்பது உள்ளாட்சிக்கான தேர்தல் அல்ல, ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் அத்தனை பேரும் மட்டுமல்ல , நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் குடும்பத்தினர், உறவினர்கள் அத்தனை பேரையும் அழைத்துச் சென்று நாம் வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை சின்னம்.

வாக்கு பெட்டியில் நமக்கு எந்த எண்! இப்பவே பாருங்க! நாம ஒன்னாம் நம்பர் இடத்துல இருக்கிறோம். இந்த ஒன்னாம் நம்பர் இடத்தை நாம் ஜூன் நான்காம் தேதி வெற்றி பெறுகின்ற பொழுது அதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வோம் ஒவ்வொரு நபர் இடமும் செல்வோம் பத்தாண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்துகின்ற பிரதமர் மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்த கோவையில் இருந்து நம் அன்பு சகோதரர் அண்ணாமலை தேர்ந்தெடுப்போம். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.



கோவை பா.ஜ.க வின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தை வெற்றி பெற செய்து அண்ணாமலை வெற்றி பெறச் செய்வோம் என்று கூறினார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட அய்யா சாமி கோயில் வீதி மற்றும் வைசியாள் வீதி பகுதியில் அண்ணாமலையை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, இப்பகுதியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுதம், இதம், மோடியின் மகள் போன்ற திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் மிக உற்சாகமாக அவர்களை வரவேற்று அண்ணாமலைக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...