பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்று எல்.முருகன் உறுதியளித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எரங்காட்டூர், தொட்டம்பாளையம் மற்றும் பவானிசாகர் நகர் பகுதிகளில் இன்று ஏப்ரல்.5 மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி பெருந்தலைவர் காமராஜர் அய்யாவின் பெயர் கொண்ட பவானிசாகர் பேருந்து நிலையத்திற்கு, பெயர் மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் ‘போலி திராவிட மாடலின்’ முயற்சிகள் முறியடிக்கப்படும், மீன் வளர்ப்புக்கான திட்டப் பணிகள், மத்திய மீன்வளத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளேன்.



மேலும், முத்தரையர் சமூக மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ‘பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்’ அய்யாவிற்கு என்னுடைய சொந்த செலவில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பேன் என்பதை உறுதியளித்துள்ளேன்.

களத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை நம்மால் மட்டுமே தர முடியும். தாமரையின் மலர்ச்சியே, நீலகிரியின் வளர்ச்சி என்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...