மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கும்-சிங்காநல்லூரில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உறுதி

எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரச்சாரம் செய்தார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதி கழகம், சித்தாப்புதூர் பகுதியில் இருந்து வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (ஏப்ரல்.6) பிரச்சாரத்தை தொடங்கினார்.



அப்போது அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வேட்பாளரை வரவேற்றனர்.



பின்னர் வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அரிபுரம் பகுதியில் பேசுகையில், இந்தப் பகுதியை எனக்கு நன்கு தெரியும். நான் இங்கே வடக்கு மாமன்ற தலைவராக பணியாற்றிய காலம் முதற்கொண்டு, நன்கு அறிவேன். திமுக அரசு செய்த, செய்கின்ற சாதனைகளை எல்லாம் கூறி நாங்கள், வாக்குகள் சேகரித்து வருகின்றோம். மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் கிடைக்கப்பெறும். திமுக அரசின் சாதனைகளை கூறி தான் உங்களிடம் வாக்குகளை சேர்த்து வருகின்றோம்.

ஆனால் எதிரணியில் இருக்கக்கூடிய வெளியூரை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அரிபுரம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம், பெட்ரோல் - டீசல் விலையேற்றம், கட்டுப்படுத்தாத ஒன்றிய பாஜக அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவார்களா?. இதை நம்ப முடியுமா? பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பார்கள் அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

ஒன்றிய பாஜக அரசால் விலையேற்றம், நிதி அளிப்பதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. இதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள், இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள். இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் வேண்டும் என்று கேட்டு உள்ளீர்கள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாவோ, அல்லது வேறிடத்தில் வீடோ உங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்தவுடன் முழு வீச்சில் அதை செய்து கொடுப்போம் என்பதை நாங்கள் உத்திரவாதம் கொடுக்கின்றோம். நாங்கள் என்றைக்கும் கூட இருப்போம். நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கின்றேன். மக்களுடன் மக்களாக இருக்க வேண்டும் என மாண்புமிகு முதல்வரும், கழக தலைவருமான தளபதி அவர்கள் உத்திரவிட்டுள்ளார். அதனால் உங்களிடத்தில் தான், நாங்கள் இருப்போம், உங்கள் குறைகளை தீர்த்து வைப்போம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...