தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட எதிர்க்கட்சியினர் பயன்படுத்தவில்லை - தும்மனட்டியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் பிரச்சாரம்

ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.


நீலகிரி: மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், நீலகிரி பாராளுமன்றம், உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்மனட்டி ஊர் மக்களைச் இன்று (ஏப்ரல்.7) சந்தித்து பரப்புரை செய்து, தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.



அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்வதன் அவசியம் குறித்து விளக்கினார். நடைமுறைக்கு சாத்தியமற்ற பொய் வாக்குறுதிகளை அறிக்கையாக தயாரித்து, கடந்த பத்தாண்டுகளில் நாம் கட்டியமைத்த பொருளாதாரக் கட்டுமானத்தை உடைப்பதையே நோக்கமாக கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், தேசத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தை அறிக்கையில் கூட பயன்படுத்தவில்லை.



இப்படி தகுதியற்றவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டியது நமது கடமை. முற்றிலும், ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப நலன் கொண்ட சுயநலவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியை விரட்டுவோம் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...