லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் பம்புசெட் நிறுவனங்களுக்கு பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் தகவல்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோவையில் இயங்கி வரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

பல்வேறு சிக்கல்களில் இருந்து விடுபட்டு பம்புசெட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் எதிர்பாராதது. மேலும், கோவையில் இயங்கிவரும் பம்புசெட்டு நிறுவனங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் பெரும் பின்னடைவினை ஏற்படுத்தும். சுமார் 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் கோவையில் இயங்கிவரும் பம்புசெட் நிறுவனங்களுக்கு தேவைப்படும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மூலப் பொருட்கள் வரத்து தடைபட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல கோடி பெறுமானமுள்ள பம்புசெட்டுகள் விற்பனைக்கு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தொழிற்சாலைகளில் தேக்கமடைந்துள்ளன.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களுடன் கலந்து பேசி இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சைமா சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" என சைமா தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...