வால்பாறையில் மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி..!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறையில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.



குறிப்பாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறை பகுதிக்கு வருவதால் அனைத்து கட்சியினர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தி நேற்று காலை வாட்டர்பால், கருமலை, வால்பாறை, வெள்ளமலை, முடீஸ், சோலையார், கன்னி மேடு சோலையார், சோலையாறு அணை, சேக்கள்முடி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு வால்பாறை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கும் அலுவலகம் கட்டி தருவதாக தெரிவித்தார்.



மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்தவும், வால்பாறை பகுதியில் மாற்று தொழில் கொண்டு வரவும், தொழில் பயிற்சி கல்லூரி கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கி மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...