காற்றாலை மின்சாரத்தை அரசு உற்பத்தி செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பு - பொள்ளாச்சியில் சீமான் புகார்

தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் செயல்படுத்தலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர்கட்சியின் வேட்பாளர் சுரேஷ் குமாரை ஆதரித்து இன்று பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, 10 ஆண்டு பாஜக ஆட்சியில் நாட்டில் எதுவும் வளர்ந்து விடவில்லை. மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக சேர்ந்த 39 எம்பிக்கள் மக்களுக்காக எதுவும் பேசவில்லை. மீத்தேன் திட்டத்தை தமிழக விவசாயிகளை பாதிக்கும் காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.

காற்றாலை, சூரிய ஒளி மற்றும் கடல் அலை மின்சாரத்தை அரசை உற்பத்தி செய்யாமல், தனியாருக்கு தாரை வார்த்து இருப்பதாகவும், தேர்தல் பரப்புரையின் போது சீமான் குற்றம் சாட்டி பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...