இது உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது - உடுமலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றால் பலர் பலன் அடைந்துள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வாளவாடி பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாக்குகள் சேகரித்தனர்.



அப்போது அவர் பேசியதாவது,



கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதிகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டங்களால் பலர் பலன் அடைந்துள்ளனர். மேலும் நியாய விலை கடைகளில் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவச அரிசையும் வழங்கபட்டு வருகிறது.

விவசாயிகள் நலனை மேம்படுத்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றார். எனவே உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது. மத்தியில் டெல்லியில் ஆளும் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்புக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேசும் பொழுது, தமிழகத்தில் திமுக அதிமுக அரசுகள் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடு செய்து மக்களுக்கு குறைவாக கொடுத்து வருகிறார்கள். மேலும் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே அமைச்சர் சக்கரபாணி மூலம் போடப்பட்ட வேட்பாளர் தான் தற்பொழுது திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, எனவே இந்த திட்டத்தை பாஜக கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிவித்தார் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...