பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் வெற்றியை உறுதி செய்யும் -காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிரச்சாரம்

தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரவுண்டானா அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயகுமார் ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தாமாக பொதுச்செயலாளரும், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான விடியல் சேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மாவட்டத் தலைவர் ஓகே சண்முகம், மாவட்டத் தலைவர் வி.பி. சண்முகம், பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மோகனா சரவணன், வட்டாரத்தலைவர் தனபால் சாமி, மாவட்ட துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், தமாகா நிர்வாகி அருண் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுகவிற்கு எதிர்மறை வாக்கு அதிகரித்துக் கொண்டு போகின்றது. அதனுடைய தாக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி என மக்கள் முடிவெடுத்து இருக்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால ஆட்சியினுடைய சாதனைகள் மக்கள் திட்டங்களே எங்களுடைய வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புகின்றோம். ஈரோடு போன்ற மிக முக்கியமான தொகுதியிலே பல பிரச்சனைகள் நிலுவையிலே இருக்கின்றது. அந்தப் பிரச்சினைகளை எல்லாம் எங்களுடைய வெற்றி வேட்பாளர் மக்களை நேரடியாக சந்தித்து மத்திய அரசுடைய உதவியோடு 100% மக்கள் பணியாற்றக்கூடிய நிலையில் உறுதியாக ஏற்படுத்துவார் என்று வாக்காளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.



தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி இன்றைக்கு மக்கள் மனதிலே முதல் அணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்து தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. 55 வருடங்களுக்கு பிறகு தமிழகத்திலே ஒரு நல்லாட்சி அமைய இந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அடித்தளம் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கையோடு நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...